BJP
பாரதிய ஜனதா கட்சி
பாரதிய ஜனதா கட்சி (BJP) என்பது இந்தியாவின் முக்கியமான தேசிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். இக்கட்சி 1980ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அடல் பிகாரி வாஜ்பாய் மற்றும் லால் கிருஷ்ண அத்வானி ஆகியோர் தொடக்கத்தில் முக்கியத் தலைவர்களாக இருந்தனர். பா.ஜ.க., இந்துத்துவா கொள்கையை ஆதரித்து செயல்படுகிறது. மத்தியில் 1998 முதல் 2004 வரை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) தலைமை ஏற்று ஆட்சியை நடத்தியது.அதன்பின்னர் எதிர்கட்சியாக 10 ஆண்டுகள் செயல்பட்டு வந்த பாஜக 2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையில் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி தொடர்ந்து 3வது முறையாக 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி நடத்தி வருகிறது. இக்கட்சி ஊடகம், தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைத்தளங்களை ஆக்கபூர்வமாக பயன்படுத்தி தங்கள் கொள்கைகள், ஆட்சியின் நலத்திட்டங்களை மக்களிடையே எடுத்துரைத்து பலத்தை அதிகரித்துள்ளது. மாநில அரசியலில் பல மாநிலங்களில் பாஜக முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டில் முன்பை விட பாஜகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. அக்கட்சி தொடர்பான அனைத்து செய்திகளையும் காணலாம்.
சட்டமன்றத் தேர்தலில் பாஜக படுதோல்வி.. காரணம் என்ன? அறிக்கை கேட்கும் டெல்லி தலைமை!!
தோல்வியின் எதிரொலியாகத் தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்து நயினார் நாகேந்திரன் மாற்றப்படலாம் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. இது குறித்துக் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தரப்பில் கேட்டபோது, "எந்தவொரு கட்சியிலும் தோல்வி ஏற்படும்போது அதன் காரணங்களை ஆராய்வது இயல்பானது.
- esakkiraja selvarathinam
- Updated on: May 14, 2026
- 07:40 am IST
பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு வாகனங்கள் குறைப்பு.. என்ன காரணம்!
Prime Minister Narendra Modi : பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு வாகனங்கள் 2- ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், எரிபொருள் சிக்கனத்தை கடைப்பிடிப்பதுடன், மின்சார வாகனங்கள் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை பிரதமர் மோடி வழங்கினார்.
- Gowtham Kannan s
- Updated on: May 13, 2026
- 17:18 pm IST
மேற்கு வங்கத்தின் முதல் பாஜக முதலமைச்சராக சுவேந்து அதிகாரி பதவியேற்பு.. ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கம்!
294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவையில் 207 இடங்களைக் கைப்பற்றி, திரிணாமுல் காங்கிரஸின் 15 ஆண்டுகால ஆட்சியை பாஜக முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. சுவேந்து அதிகாரியின் தொடக்கக் கால அமைச்சரவையில் பாஜகவின் முக்கிய முகங்கள் இடம்பெற்றுள்ளனர். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய வகையில் இந்தத் தேர்வு அமைந்துள்ளது.
- esakkiraja selvarathinam
- Updated on: May 9, 2026
- 13:02 pm IST
பாஜகவின் வரலாற்றுத் தொடக்கம்.. மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர்.. யார் இந்த சுவேந்து அதிகாரி?
சுவேந்து அதிகாரி முதலமைச்சராகப் பதவியேற்பதன் மூலம் இரண்டு முக்கிய வரலாற்றுச் சாதனைகள் நிகழ்த்தப்படுகின்றன. ஒன்று, மேற்கு வங்கத்தில் பாஜக சார்பில் முதலமைச்சராகும் முதல் நபர் இவராவார். மற்றொன்று, கடந்த 55 ஆண்டுகளில், கொல்கத்தாவைச் சாராமல் மாவட்டப் பின்னணியில் இருந்து மாநில நிர்வாகத்தை வழிநடத்தும் முதல் முதலமைச்சர் இவராவார்.
- esakkiraja selvarathinam
- Updated on: May 9, 2026
- 11:34 am IST
தொகுதிக்காக பல பணிகளை மேற்கொண்டுள்ளோம்.. புதுச்சேரி மண்ணடிப்பேட்டை பாஜக வேட்பாளர்!
புதுச்சேரியில் மண்ணடிப்பேட்டை தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நமச்சிவாயம் வெற்றி பெற்றுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த தொகுதிக்காக நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம், பல்வேறு நலதிட்டங்களை மேற்கொண்டுள்ளோம். அதன் காரணமாக தான் இந்த வெற்றி என கூறியுள்ளார்.
- Vinalin Sweety
- Updated on: May 5, 2026
- 01:27 am IST
எல்.முருகனை ஆதரித்து மபி முதலமைச்சர் தேர்தல் பிரசாரம்!
மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியில் 2026 ஆம் ஆண்டுக்கான விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக, அவினாசி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் மத்திய இணை அமைச்சர் எல் முருகனை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
- Vinalin Sweety
- Updated on: Apr 22, 2026
- 00:32 am IST
தென்காசியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்!
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வாசுதேவநல்லூர் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரை ஆதரித்து தென்காசியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். பாஜவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் தமிழகத்தில் தீவிர தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர் தென்காசியில் பிரசாரம் மேற்கொண்டார்.
- Vinalin Sweety
- Updated on: Apr 19, 2026
- 21:39 pm IST
மொடக்குறிச்சியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா!
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கிருத்திகா சிவக்குமாரை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில், அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
- Vinalin Sweety
- Updated on: Apr 19, 2026
- 21:30 pm IST
“மகனை முதல்வராக்கவே ஸ்டாலின் உழைக்கிறார்”.. ஈரோட்டில் அமித் ஷா வைத்த ‘வாரிசு’ அரசியல் விமர்சனம்!!
Tamilnadu Assembly Election: தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் ஆன்மீகப் பெருமைகளை மத்திய பாஜக அரசு எப்போதும் போற்றும் என்று குறிப்பிட்ட அவர், "தமிழகம் இழந்த பெருமைகளை மீட்கவே எடப்பாடி பழனிசாமி தலைமையில் இங்கு வெற்றிக் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது என்று அமித் ஷா கூறினார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Apr 19, 2026
- 13:06 pm IST
NDA கூட்டணிக்கு வாக்குசேகரிக்கு களமிறங்கிய அமித் ஷா, ராஜ்நாத் சிங்.. அனல் பறக்கும் தேர்தல் களம்!
`Tamilnadu Assembly Election: ஹெலிபேட் தளம் அமைந்துள்ள இடத்தைச் சுற்றியுள்ள 2 கிலோமீட்டர் சுற்றளவிற்கு ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி ட்ரோன்களைப் பயன்படுத்துபவர்கள் மீது சட்டப்படி கடுமையான கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது
- esakkiraja selvarathinam
- Updated on: Apr 19, 2026
- 08:22 am IST
தீவிர தேர்தல் பிரசாரம்.. கோயம்புத்தூர் விமான நிலையம் வந்த அண்ணாமலை!
தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர் மாவட்டங்கள் தோறும் தீவிர தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள, முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கோயம்புத்தூர் விமான நிலையம் வந்தார்.
- Vinalin Sweety
- Updated on: Apr 18, 2026
- 20:59 pm IST
“தமிழ் மண், மொழி, கலாச்சாரத்தை ஆர்எஸ்எஸ், பாஜகவால் தொடக்கூட முடியாது”.. ராகுல் காந்தி கர்ஜனை!!
Tamilnadu Assembly Election: பாஜகவின் தாக்குதலில் இருந்து திமுகவும், இந்தியா கூட்டணி சகோதரர்களும் தமிழ்நாட்டை காத்து வருகிறார்கள். சமூக நீதி என்றால் என்னவென்று நாட்டிற்கே நாங்கள் காட்டியுள்ளோம். என்ன தைரியம் இருந்தால் தமிழ் மண், மொழி, கலாச்சாரத்தை ஆர்எஸ்எஸ், பாஜகவினர் தாக்குவார்கள்
- esakkiraja selvarathinam
- Updated on: Apr 18, 2026
- 13:04 pm IST
வேடசந்தூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை!
தமிழகத்தில் ஏப்ரல் 23, 2026 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
- Vinalin Sweety
- Updated on: Apr 17, 2026
- 14:24 pm IST
பிரதமர் தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்துக்கொண்டு இருக்கிறார்.. அண்ணாமலை பேச்சு!
உதயநிதி ஸ்டாலின், பிரதமர் மோடி மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என கூறுவார். பிரதமர் நேரந்திர மோடி தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்துக்கொண்டு தான் இருக்கிறார் என்று முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ராமநாதபுர தேர்தல் பிரசாரத்தில் கூறியுள்ளார்.
- Vinalin Sweety
- Updated on: Apr 16, 2026
- 20:03 pm IST
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்.. 850 தொகுதிகளாக உயரும் மக்களவை?.. 3 முக்கிய மசோதாக்கள் இன்று தாக்கல்!
இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும், இந்த தொகுதி மறுவரையறைக்கான சட்டத்திருத்த முன்மொழிவுகளை எதிர்த்து உள்ளன. எதிர்க்கட்சிகளின் ஒட்டுமொத்த எதிர்ப்புகளுக்கு இடையே நாடாளுமன்றம் இன்று காலை 11 மணிக்கு கூடுகிறது. அப்போது யூனியன் பிரதேச சட்ட திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிமுகம் செய்கிறார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Apr 16, 2026
- 07:50 am IST